
எனது நீண்ட நாள் நண்பர் ஆர்தர் ஃபோர்ட் ஒரு சிறந்த மனிதர். ஆனால் தனது பங்குக்கு அவரும் சில கெட்ட பழக்கங்களைச் சேகரித்திருந்தார். அவரது தரப்பில் எந்தத் தவறுமில்லாமலேயே அவர் சில காலம் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்தார். அதிலிருந்து மீள்வதற்காக அவர் மதுவுக்கு அடிமையானார். அவர் மதுவுக்கு அவ்வளவு தூரம் அடிமையானதால் இறுதிக் காலத்திலும் கூடச் சில நேரங்களில் வண்டியிலிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுந்திருக்கிறார். அவர் அவ்வப்போது சிகரெட் பிடித்திருக்கிறார். ஆனால் அதற்கு அடிமையாகவில்லை. அதனால் எனது கண்டிப்பான 'வழிகாட்டியான' லிலியை விட ஆத்ம வடிவிலிருக்கும் ஃபோர்டிடம் கூடுதல் புரிந்துணர்வை எதிர்பார்த்தேன். ஆனால் ஆர்தர் இந்த உடலின் பலவீனங்களுக்கு முழு மறுப்புத் தெரிவித்தார்.
மார்ச் மாதம் முதலாம் திகதி தான் சிகரெட்டைப் பற்றி முதன் முதலில் குறிப்பிடப்பட்டது. அதாவது லிலி பின்வருமாறு எழுதினார்: "ருத், நீ புகையால் நிரப்பப்படாமல் இருந்தால் நாம் உன்னுடன் தொடர்பு கொள்வதும் நீ அதனைக் கிரகிப்பதும் மிக இலகுவாக இருக்கும். அது முன்னேற்றத்தைத் தடுக்கிறது. புகையாலான திரை போட்ட உலகத்தில் நீ இருப்பதைப் போலுள்ளது. அந்த மூட்டத்தைத் துளைப்பது எமக்குக் கடினமாக உள்ளது. அதனால் ஏன் இப்பொழுதே நீ புகைபிடித்தலை நிறுத்தி விட்டு இந்நூலை எழுதும் வேலையில் ஈடுபடக்கூடாது?" மேலும் இது போன்ற சில குறிப்புகளின் பின் அவர், "சரி, இதோ ஆர்ட். உன்னைக் கண்டிப்பது தானாக இருக்கக் கூடாது என அவர் நினைக்கிறார்" என எழுதினார்.
பத்து நாட்களின் பின் சில பிரபஞ்ச விதிகளைப் பற்றி ஆராய்ந்த பின் ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: "முந்திய சுற்றில் இழைத்த தவறுகளைப் போதுமான அளவு நேரம் சீர்தூக்கிப் பார்த்துப், பின் எதிர்காலத்தில் உருவாகும் சலனங்களைச் சரியாக எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்காமல் ஏன் மீண்டும் மீண்டும் பிறக்க விரும்புகிறோம் என்பது இப்போ விளங்குகின்றது. தான் தயாராக முன் ஏன் ஒரு ஆத்மா பூவுடலெடுக்க அவசரப்படுகிறது? 'மனித இயல்பின்' தவறுகளுக்கு இங்கே நாம் முகம் கொடுக்கிறோம்: உடல் சம்பந்தமான இன்பங்களில் இருக்கும் பேரார்வம், மது பானத்தில் இருக்கும் அதிக நாட்டம், பாலுறவு, உடற் கட்டமைப்பில் ஆர்வம் (body-building) போன்ற மனித இயல்பின் பலவீனங்கள். சிலர் தாம் விட்டு விட்டு வந்த உடலில் அளவுக்கதிகமாகப் பிரியம் வைப்பதனால் இன்னொரு உடலை உருவாக்கி அதனில் பிரியம் வைத்து வேலை செய்யும் சந்தர்ப்பத்துக்கு அவர்களால் காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த ஆத்மாக்கள் உண்மையிலேயே உலகியல் வாழ்வில் சிக்குண்ட ஆத்மாக்களாகும். உடலின் தாகங்களைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகும் வரை அவர்களால் ஆத்மீக முன்னேற்றம் அடைய முடியாது. பழக்கமாக மாறக்கூடிய எந்த வகையான சந்தோஷங்களும் (அவை எல்லையற்றன) பூதவுடலுடன் இருக்கையிலேயே அவற்றிலுள்ள தாகங்களை ஒதுக்கித் தள்ளி வைக்கும் வரை ஒருவரை மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்புச் சுழற்சியில் விழவைக்கும் - பணத்தின் மேலுள்ள ஆசை, அதிகாரத்தின் மேலுள்ள ஆசை, சிற்றின்ப ஆசை, அத்துடன் மது, போதைப் பொருட்கள், புகையிலை போன்றவற்றின் மேலுள்ள இயற்கைக்கு மீறிய நாட்டம், அத்துடன் விடுபட முடியாமலிருக்கும் எந்த வகைப் பழக்க வழக்கங்களும். பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட விரும்பும் எந்தவொரு ஆத்மாவுக்கும் இது ஒரு சரியான அறிவுறுத்தலாகும். நான் சொல்வது புரிகிறதா?"
"இந்தப் பக்கத்திற்கு வரும் குடிகாரர்கள் பூவுலகிலிருக்கும் அதிகமாகக் குடிக்கும் ஆத்மாக்களிடையே அலைந்து திரிந்து குடி மயக்கத்தினால் உண்டாகும் இன்பத்தை நுகர்ந்து அனுபவிப்பார்கள். இன்னும் பூதவுடலுடன் பிணைக்க வைக்கும் அந்தப் பழக்கத்தின் பிணைப்பை அவர்களால் விட முடியாமல் இருக்கும். அடிக்கடி புகை பிடிப்பவர்கள், போதைப் பொருள் உபயோகிப்பவர்கள் அல்லது தனது உடலுறவு ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்காக மற்றவர்களை வருத்தும் பாலியல் வெறி பிடித்தவர் போன்றோருக்கும் இது பொருந்தும். இந்தப் பக்கத்தில் நாம் கற்கும் மிக முக்கியமான ஒரு பாடம் இதுவாகும். பூவுலகில் இருக்கையிலேயே முடிவில்லாத இந்தப் பிறப்பு இறப்புச் சுழற்சியில் இருந்து விடுபட எம்மைப் பூதவுடலுடன் திருப்தியுறச் செய்து பிணைக்கும் கட்டுக்கள், தளைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். எனவே அங்கு இருக்கையிலேயே கெட்ட பழக்கங்களை வெல்லுங்கள். அந்தத் தளைகளிலிருந்து விடுபடாமல் இங்கு வருவதிலும் பார்க்க அது இலகுவாகும். மதுவருந்துதல், புகை பிடித்தல், போதை மருந்துப் பழக்கங்கள் இல்லாதவர்களும் காம இச்சைகள் அற்றவர்களும் அப்படிப்பட்ட தளைகள் ஏதுமின்றி இந்தப் பக்கத்திலே சுதந்திரமாக இருப்பார்கள்.
"பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதனை ஒருவருக்கும் ஈயாத கருமிகளுக்கும் இங்கே அதே மாதிரிப் பிரச்சனை தானுள்ளது என்பதையும் மறக்கக் கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் கூடுதல் நாட்டம் கொள்பவர்கள் அது அரசியலாக இருக்கலாம், சமயமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாக என்றாலும் இருக்கலாம். அத்துடன் மற்றவர்களின் சமய நம்பிக்கைகளைத் தாங்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தங்களது மனோபாவத்தின் குறைபாடுகளை உடலுடன் இருக்கையிலேயே களைந்தாலன்றி இந்தப் பக்கத்திலும் மற்றவர்களுக்கு அவர்கள் என்ன விதமாக நினைக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டுமென்று அறிவுரை வழங்குவது போன்ற தங்களது எல்லாவிதமான செயற்பாடுகளையும் செய்ய முயற்சிப்பார்கள். இன்னொரு விதமாகச் சொல்வதானால் இன்னமும் பூதவுடலில் வசித்துக் கொண்டு இருப்பவர்களிலும் பார்க்க நாம் எந்த மேல் நிலையிலும் இல்லை; கீழ் நிலையிலும் இல்லை. நாம் எம்முடன் எமது குண நலன்களிலுள்ள குறை பாடுகளையும் சேர்த்தே கொண்டு செல்கிறோம். அதாவது நீங்கள் இப்போ உள்ள நிலையில் இருக்கும் அதே தீவிர நாட்டங்கள், தளைகள் அனைத்தையும் கொண்டு வருகிறீர்கள். அந்தக் குறைபாடுகள் எல்லாம் சரி செய்யப்படும் வரை நாம் எந்தவொரு குறிப்பிட்ட நிலைக்கும் ஆத்மீகத்தில் முன்னேற மாட்டோம். அதனால் தான் அக் குறைபாடுகளைக் களைந்து எம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தளைகளைத் தாண்டும் நம்பிக்கையுடன் நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.
மார்ச் மாதம் முதலாம் திகதி தான் சிகரெட்டைப் பற்றி முதன் முதலில் குறிப்பிடப்பட்டது. அதாவது லிலி பின்வருமாறு எழுதினார்: "ருத், நீ புகையால் நிரப்பப்படாமல் இருந்தால் நாம் உன்னுடன் தொடர்பு கொள்வதும் நீ அதனைக் கிரகிப்பதும் மிக இலகுவாக இருக்கும். அது முன்னேற்றத்தைத் தடுக்கிறது. புகையாலான திரை போட்ட உலகத்தில் நீ இருப்பதைப் போலுள்ளது. அந்த மூட்டத்தைத் துளைப்பது எமக்குக் கடினமாக உள்ளது. அதனால் ஏன் இப்பொழுதே நீ புகைபிடித்தலை நிறுத்தி விட்டு இந்நூலை எழுதும் வேலையில் ஈடுபடக்கூடாது?" மேலும் இது போன்ற சில குறிப்புகளின் பின் அவர், "சரி, இதோ ஆர்ட். உன்னைக் கண்டிப்பது தானாக இருக்கக் கூடாது என அவர் நினைக்கிறார்" என எழுதினார்.
பத்து நாட்களின் பின் சில பிரபஞ்ச விதிகளைப் பற்றி ஆராய்ந்த பின் ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: "முந்திய சுற்றில் இழைத்த தவறுகளைப் போதுமான அளவு நேரம் சீர்தூக்கிப் பார்த்துப், பின் எதிர்காலத்தில் உருவாகும் சலனங்களைச் சரியாக எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்காமல் ஏன் மீண்டும் மீண்டும் பிறக்க விரும்புகிறோம் என்பது இப்போ விளங்குகின்றது. தான் தயாராக முன் ஏன் ஒரு ஆத்மா பூவுடலெடுக்க அவசரப்படுகிறது? 'மனித இயல்பின்' தவறுகளுக்கு இங்கே நாம் முகம் கொடுக்கிறோம்: உடல் சம்பந்தமான இன்பங்களில் இருக்கும் பேரார்வம், மது பானத்தில் இருக்கும் அதிக நாட்டம், பாலுறவு, உடற் கட்டமைப்பில் ஆர்வம் (body-building) போன்ற மனித இயல்பின் பலவீனங்கள். சிலர் தாம் விட்டு விட்டு வந்த உடலில் அளவுக்கதிகமாகப் பிரியம் வைப்பதனால் இன்னொரு உடலை உருவாக்கி அதனில் பிரியம் வைத்து வேலை செய்யும் சந்தர்ப்பத்துக்கு அவர்களால் காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த ஆத்மாக்கள் உண்மையிலேயே உலகியல் வாழ்வில் சிக்குண்ட ஆத்மாக்களாகும். உடலின் தாகங்களைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகும் வரை அவர்களால் ஆத்மீக முன்னேற்றம் அடைய முடியாது. பழக்கமாக மாறக்கூடிய எந்த வகையான சந்தோஷங்களும் (அவை எல்லையற்றன) பூதவுடலுடன் இருக்கையிலேயே அவற்றிலுள்ள தாகங்களை ஒதுக்கித் தள்ளி வைக்கும் வரை ஒருவரை மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்புச் சுழற்சியில் விழவைக்கும் - பணத்தின் மேலுள்ள ஆசை, அதிகாரத்தின் மேலுள்ள ஆசை, சிற்றின்ப ஆசை, அத்துடன் மது, போதைப் பொருட்கள், புகையிலை போன்றவற்றின் மேலுள்ள இயற்கைக்கு மீறிய நாட்டம், அத்துடன் விடுபட முடியாமலிருக்கும் எந்த வகைப் பழக்க வழக்கங்களும். பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட விரும்பும் எந்தவொரு ஆத்மாவுக்கும் இது ஒரு சரியான அறிவுறுத்தலாகும். நான் சொல்வது புரிகிறதா?"
"இந்தப் பக்கத்திற்கு வரும் குடிகாரர்கள் பூவுலகிலிருக்கும் அதிகமாகக் குடிக்கும் ஆத்மாக்களிடையே அலைந்து திரிந்து குடி மயக்கத்தினால் உண்டாகும் இன்பத்தை நுகர்ந்து அனுபவிப்பார்கள். இன்னும் பூதவுடலுடன் பிணைக்க வைக்கும் அந்தப் பழக்கத்தின் பிணைப்பை அவர்களால் விட முடியாமல் இருக்கும். அடிக்கடி புகை பிடிப்பவர்கள், போதைப் பொருள் உபயோகிப்பவர்கள் அல்லது தனது உடலுறவு ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்காக மற்றவர்களை வருத்தும் பாலியல் வெறி பிடித்தவர் போன்றோருக்கும் இது பொருந்தும். இந்தப் பக்கத்தில் நாம் கற்கும் மிக முக்கியமான ஒரு பாடம் இதுவாகும். பூவுலகில் இருக்கையிலேயே முடிவில்லாத இந்தப் பிறப்பு இறப்புச் சுழற்சியில் இருந்து விடுபட எம்மைப் பூதவுடலுடன் திருப்தியுறச் செய்து பிணைக்கும் கட்டுக்கள், தளைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். எனவே அங்கு இருக்கையிலேயே கெட்ட பழக்கங்களை வெல்லுங்கள். அந்தத் தளைகளிலிருந்து விடுபடாமல் இங்கு வருவதிலும் பார்க்க அது இலகுவாகும். மதுவருந்துதல், புகை பிடித்தல், போதை மருந்துப் பழக்கங்கள் இல்லாதவர்களும் காம இச்சைகள் அற்றவர்களும் அப்படிப்பட்ட தளைகள் ஏதுமின்றி இந்தப் பக்கத்திலே சுதந்திரமாக இருப்பார்கள்.
"பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதனை ஒருவருக்கும் ஈயாத கருமிகளுக்கும் இங்கே அதே மாதிரிப் பிரச்சனை தானுள்ளது என்பதையும் மறக்கக் கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் கூடுதல் நாட்டம் கொள்பவர்கள் அது அரசியலாக இருக்கலாம், சமயமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாக என்றாலும் இருக்கலாம். அத்துடன் மற்றவர்களின் சமய நம்பிக்கைகளைத் தாங்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தங்களது மனோபாவத்தின் குறைபாடுகளை உடலுடன் இருக்கையிலேயே களைந்தாலன்றி இந்தப் பக்கத்திலும் மற்றவர்களுக்கு அவர்கள் என்ன விதமாக நினைக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டுமென்று அறிவுரை வழங்குவது போன்ற தங்களது எல்லாவிதமான செயற்பாடுகளையும் செய்ய முயற்சிப்பார்கள். இன்னொரு விதமாகச் சொல்வதானால் இன்னமும் பூதவுடலில் வசித்துக் கொண்டு இருப்பவர்களிலும் பார்க்க நாம் எந்த மேல் நிலையிலும் இல்லை; கீழ் நிலையிலும் இல்லை. நாம் எம்முடன் எமது குண நலன்களிலுள்ள குறை பாடுகளையும் சேர்த்தே கொண்டு செல்கிறோம். அதாவது நீங்கள் இப்போ உள்ள நிலையில் இருக்கும் அதே தீவிர நாட்டங்கள், தளைகள் அனைத்தையும் கொண்டு வருகிறீர்கள். அந்தக் குறைபாடுகள் எல்லாம் சரி செய்யப்படும் வரை நாம் எந்தவொரு குறிப்பிட்ட நிலைக்கும் ஆத்மீகத்தில் முன்னேற மாட்டோம். அதனால் தான் அக் குறைபாடுகளைக் களைந்து எம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தளைகளைத் தாண்டும் நம்பிக்கையுடன் நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.
சபலத்தூண்டுதல்கள் (temptations) ஏதுமில்லாத இப்பக்கத்தில் அந்தத் தளைகளைக் களைவதிலும் பார்க்கப் பூவுடலுடன் இருக்கையில் களைவது இலகுவானதாகும். எங்களை வேறு விதங்களில் தூண்டிவிடக் கூடியவை ஒன்றும் ஆத்ம உலகாகிய இங்கே இல்லை ஆதலால் சரியான முறையில் நடப்பதற்கு இங்கே ஒரு வெகுமதியும் கிடையாது. பூவுலகிலேயே கடினமான பள்ளிக்கூடமிருக்கிறது. அங்கே தான் நாம் சபலத்தூண்டுதல்களைச் சந்தித்து வெற்றி கொள்ள வேண்டும்."
ஓரிரு வாரங்களின் பின் ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "இன்று, வாழ்வதற்கு எல்லாம் இருந்தும் போதை மருந்து எடுக்கத் தொடங்கி அதன் காரணத்தினால் தன்னைச் சுற்றி இருப்பவர்களில் அக்கறையை இழந்து இறுதியாகத் தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட ஒருவரைப் பற்றிப் பார்ப்போம். இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்ட இந்த உயிரை எடுக்கும் உரிமை கண்டிப்பாக அவருக்கு இல்லை. ஆனால் அவரது மனமானது நிறைந்த குழப்பத்தில் இருந்ததால் தான் உயிர்ச்சுடரை அணைப்பதை அவர் முழுவதும் உணர்ந்தாரில்லை. இன்னும் தெளியாத போதை மயக்கத்தில் இங்கே அவர் கண் விழிக்கையில் அடுத்த மோர்ஃபின் (morphine) போதை ஊசியையோ அல்லது அவருக்குப் பிடித்த போதை மருந்தை வாங்குவதற்குப் போதை மருந்து விற்பனை செய்பவரையோ தேடத் தொடங்கினார். பல ஆத்மாக்கள் அவரருகில் உலவித் திரிந்ததைக் கண்டார். ஆனால் ஒருவருக்கும் அவர் எங்கே போதை மருந்து வாங்கலாமென்று தெரியவில்லை. சிலர் அவரைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ஆனால் ஏனையவர்கள் பூவுலகிலிருக்கும் பலரைப் போல அவரது தேவைகளை அலட்சியப்படுத்தினர். ஏனென்றால் அது ஒரு கீழான நிலையிலுள்ள - பூவுலகப் பிணைப்புகளில் இருந்து விடுபடாத ஆத்மாக்கள் அடுத்த பிறவியெடுக்கும் வரையில் தங்கியிருக்கும் - இடமாகும். அவரது தேவையானது அவரைப் பதற்றத்துடன் அங்குமிங்குமாக அலைய வைத்தது. அவரது மனம் மிகப் போதையில் இருந்ததால் தான் பூதவுடலுடன் இல்லை என்பதைக் கூட அவர் கவனிக்கவில்லை. அவர் பூதவுடலுடன் இருக்கையில் எப்படிப் போதைப் பொருளுக்காகத் திணறி ஏங்கினாரோ அதே போல அவரது ஆத்ம உடலும் ஏங்கியது. அவர் நிலத்தில் தானே விழுந்தார். பின் தரையைத் தனது கை நகங்களால் கீறினார். பூவுடல்களைப் போலவே இந்த எண்ண வடிவங்களெல்லாம் அவருக்கு உண்மையாகவே பட்டன. அவர் சிணுங்கினார்; கெஞ்சினார்; அழுதார். தனக்குப் போதை மருந்து வேண்டும் இல்லையெனில் தனக்குப் பைத்தியம் பிடித்து விடுமெனத் திடமாக நம்பினார். பின்னர் தன்னில் இரக்கம் காட்டாததற்குக் கடவுளைக் கூக்குரலிட்டுத் திட்டத் தொடங்கினார். பூதவுடலுடன் இருக்கையில் எப்படி முழுப்போதையில் இருந்தாரோ அதே போலவே ஆத்ம நிலையிலும் இருந்தார். அதாவது தன்னைப் பற்றியோ ஏனையோரைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாத முழுப் போதைப் பொருளடிமை. போதைப் பொருளின் மூலமே தனது உடல் உபாதைகளைப் போக்கிக் கொண்டிருந்தார்.
"கடைசியாக அவர் உணர்வற்ற நித்திரையில் விழுந்தார். இந்நிலை மாதங்களுக்கும் நீடிக்கலாம் அல்லது கால காலத்துக்கும் நீடிக்கலாம். ஏனெனில் மனத்தை நாசம் செய்ததும் பூவுலகில் பௌதீக சக்திகளைப் பலவீனப் படுத்தியதும் சேர்ந்து அவரது ஆத்மாவின் மனதை வருத்தமுறச் செய்துவிட்டன. எனவே பல காலத்துக்கு அவர் ஆத்மீக வளர்ச்சி அடைவதற்கு இயலாதவராய் இருப்பார். சில சந்தர்ப்பங்களில் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பற்றி ஒன்றும் அறியாமல் அவர் பல நூறு வருடங்களுக்குத் தூக்கம் கொள்ளலாம். இறுதியாக அவர் விழித்தெழுகையில் பூவுலகில் அவருக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அவரைச் சுற்றியுள்ள புதிதாக வந்த ஆத்மாக்கள் அவரையோ அல்லது அவரைப் பற்றியோ ஒன்றும் அறியமாட்டார்கள். அவர் உண்மையாகவே ஒரு தொலைந்து விட்ட ஆத்மா. ஏனெனில் அவருக்கு ஒருவரையும் தெரியாது. அவரது நிலையைப் பற்றியும் ஒரு அறிகுறியும் இல்லை. முன்னர் அவரின் அன்புக்குப் பாத்திரமாய் இருந்தவர்களோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ நீண்ட காலங்களுக்கு முதலே உயரிய நிலைகளுக்கு முன்னேறியோ அல்லது புதிய பெயர்களுடனும் புதிய அடையாளங்களுடனும் மீண்டும் பூவுலகில் பிறந்தோ இருப்பார்கள். அவர் எல்லா விதமான உதவிகளையும் இழந்து நிற்பார். போதை நித்திரையில் இருந்து விழித்தெழுந்து பல காலமான பின்னரும் அவரது தூக்க மயக்கம் தொடரும். ஏனெனில் அவருக்குள் ஆர்வத் தீப்பொறியை உண்டாக்கக் கூடிய விதமாக ஒருவருமில்லை. அவரது உணர்ச்சியற்ற தன்மையானது அவருக்கு உதவ என்று முன்னே வருபவர்களையும் தடுக்கும். அவரிடமிருந்து ஏதாவது ஒளியோ சுடரோ ஒன்றுமே வெளிப்படாது. அவர் தனக்குள்ளேயே ஒடுங்கிப் போயிருப்பார்.
"இந்நிலையானது மீளவும் சில டஜனிலிருந்து பல நூறு வருடங்கள் வரையிலும் நீடிக்கலாம். அதாவது அவர் கடைசியில் இறைவனை நோக்கித் தன்னைக் காப்பாற்றுமாறு அழும் வரையும் நீடிக்கும். இவர் பல நூறு வருடங்களுக்கு முன்னரே தனது துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வர இறைவனை நோக்கி மிக மெதுவாகவேனும் முனகியிருந்தால் கூட அந்த ஆண்டவனுக்கு இவரது அழுகை கேட்டிருக்கும். நாமாகத்தான் முயற்சியைத் தொடங்க வேண்டும். எமது சொந்தத் தேவைகள் எம்மை இறைவனின் காலடிக்குக் கொண்டு வரும் வரை இறைவன் காத்திருப்பான். உடனடியாகப் பழைய ஆத்மாக்கள் அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் அவரை உயர்த்தி அவரைப் போன்ற நிலையில் இருப்பவர்களைச் சுகப்படுத்தும் மறுவாழ்வு இல்லத்துக்குக் கொண்டு செல்வர். அங்கே சிலர் போதைப் பொருளில் இருந்து விடுபடுகையில் ஏற்படும் உபாதைகளில் இருந்து தணிக்கப் பட்டிருப்பார்கள். ஏனெனில் உடனடியாக இறைவனை வழி நடத்தக் கோரியிருப்பார்கள். சிலர் இவரைப் போலவே பல காலங்களுக்கும் தூக்கத்திலிருந்து இப்போ போதைப் பொருளின் பிடியிலிருந்து விடுபடும் வேதனைகள் நீங்கப் பெற்றிருப்பார்கள். ஆனால் தம் வாழ்வை மீண்டும் வாழ்வதற்கு உதவி தேவையாக இருக்கும். அவர்களின் உள்ளே உள்ள ஆத்மீகப் பொறியை மீண்டும் தூண்டுதல் செய்து மீண்டும் ஒருமுறை நாமனைவரும் கடவுளே என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கடைசியாக அந்த மனிதர் சிகிச்சைக்குப் பிரதி பலன் தரத் தொடங்கி மீண்டும் கருணையும் வலிமையையும் வரப் பெற்று தான் மிக மிகப் போதையில் இருந்த காரணத்தால் தனது ஆத்மா துயில் கொண்டிருந்தது எனவும் அதனால் தான் கடவுளைத் தன்னால் நாட முடியவில்லை எனவும் விளங்கிக் கொண்டார். அவர் தனது மனநிலை வரம்புகளைப் பாதிப்புறச் செய்யக் கூடிய எந்தவொரு விஷயத்திலும் ஆசை வைப்பதில்லை என உறுதிமொழி எடுத்தார். அத்துடன் பிறப்பெடுக்க முன் உள்ளத்தாலும் உயிராலும் தன்னிலையிழந்து நோயுற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் தனது உறுதிமொழியை வலிமையாக்கிக் கொள்வார்."
ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நான் ஃபோர்டிடம் அவரது மோட்டார் விபத்துக்கும் அதன் காரணமான மோர்ஃபின் போதைப் பொருள் பழக்கத்துக்கும் பின்னர் குடிப்பழக்கத்துக்கும் எந்தக் கர்மவினைப் பயன் இட்டுச் சென்றதென அறிந்து கொண்டாரா எனக் கேட்டேன். அவர் நேரடியாகவே பின்வருமாறு பதிலளித்தார்: "மிக நன்றாகவே அறிந்துள்ளேன். முன்னைய ஒரு பதிவின்படி நான் ஒரு குடிகாரனாக இருந்திருக்கிறேன். அப்போது என்னையும் எனது பாட்டிலையும் விட வேறொருவரைப் பற்றியும் நான் நினைத்ததில்லை. அந்தப் பிறவியில் காலனித்துவ ஆட்சியின் போது பென்ஸிலவேனியா நகரத்தில் கிட்டத்தட்ட நான் ஒரு சாக்கடையில் தான் இறந்தேன். நான் நல்ல இருதயமுள்ளவனாக இருந்தாலும் எனது வீழ்ச்சிக்கு மதுபானமே காரணமாக இருந்தது. ஏனெனில் எனக்குக் குடும்பத்தில் இருந்த பிடிப்பிலும் பார்க்க மதுவில் இருந்த பிடிப்பு அதிகமாக இருந்ததால் நான் மதுவுக்கு அடிமையாகிக் குடும்பத்தையே தியாகம் செய்தேன். ஆர்தர் ஃபோர்டாக மீண்டும் இவ்வுலகுக்கு வந்த போது பிராயச்சித்தம் செய்து ஒரு ஆத்மீக வாழ்வு வாழ்வதென்ற உறுதியான தீர்மானத்துடன் தான் வந்தேன். எனது 'நத்திங் ஸோ ஸ்ரேன்ஜ்' (மிக விசித்திரமொன்றுமில்லை) என்ற புத்தகத்திலிருந்தும் எமது சம்பாஷணைகளில் இருந்தும் நீ அறிந்து கொண்டது போல அது தான் இளமையில் எனது வாழ்க்கை முறையாக இருந்தது. எனவே மேற்கு வேர்ஜீனியாவின் மலைப் பிரதேசத்திலோ அல்லது கென்ரக்கியிலோ ஒரு சலிக்க வைக்கும் போதகராக எனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பேன். ஆனால் கனவுகளின் மூலம் முந்தைய பிறவி ஒன்றிலே பண்டைய எகிப்து தேசத்திலே நான் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததனை உணரவைத்ததன் மூலம் எனது கண்கள் திறக்கும் படி செய்யப்பட்டது. சிறிது காலத்துக்கு இந்த இரு தீர்மானங்களுடனும் சந்தோஷமாக வாழ முடிந்தது. அதாவது உடல், மனச் சோர்வுகளால் எனது இன்னொரு வாழ்க்கையான ஊதாரித்தனமான குடிகாரனாக வாழ்ந்த வாழ்க்கைக்கான யன்னலை நான் திறக்கும் வரை அப்படி இருக்க முடிந்தது. அந்த விபத்தால் எனது அந்தக் கர்மவினைகளைக் கடப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு அளிக்கப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை அந்த விபத்தானது முன்கூட்டியே தீர்மானிக்கப் படவில்லை. ஆனால் யார் கண்டது? ஏனெனில் அவ்விபத்தில் இரு பெண்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.
ஓரிரு வாரங்களின் பின் ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "இன்று, வாழ்வதற்கு எல்லாம் இருந்தும் போதை மருந்து எடுக்கத் தொடங்கி அதன் காரணத்தினால் தன்னைச் சுற்றி இருப்பவர்களில் அக்கறையை இழந்து இறுதியாகத் தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட ஒருவரைப் பற்றிப் பார்ப்போம். இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்ட இந்த உயிரை எடுக்கும் உரிமை கண்டிப்பாக அவருக்கு இல்லை. ஆனால் அவரது மனமானது நிறைந்த குழப்பத்தில் இருந்ததால் தான் உயிர்ச்சுடரை அணைப்பதை அவர் முழுவதும் உணர்ந்தாரில்லை. இன்னும் தெளியாத போதை மயக்கத்தில் இங்கே அவர் கண் விழிக்கையில் அடுத்த மோர்ஃபின் (morphine) போதை ஊசியையோ அல்லது அவருக்குப் பிடித்த போதை மருந்தை வாங்குவதற்குப் போதை மருந்து விற்பனை செய்பவரையோ தேடத் தொடங்கினார். பல ஆத்மாக்கள் அவரருகில் உலவித் திரிந்ததைக் கண்டார். ஆனால் ஒருவருக்கும் அவர் எங்கே போதை மருந்து வாங்கலாமென்று தெரியவில்லை. சிலர் அவரைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ஆனால் ஏனையவர்கள் பூவுலகிலிருக்கும் பலரைப் போல அவரது தேவைகளை அலட்சியப்படுத்தினர். ஏனென்றால் அது ஒரு கீழான நிலையிலுள்ள - பூவுலகப் பிணைப்புகளில் இருந்து விடுபடாத ஆத்மாக்கள் அடுத்த பிறவியெடுக்கும் வரையில் தங்கியிருக்கும் - இடமாகும். அவரது தேவையானது அவரைப் பதற்றத்துடன் அங்குமிங்குமாக அலைய வைத்தது. அவரது மனம் மிகப் போதையில் இருந்ததால் தான் பூதவுடலுடன் இல்லை என்பதைக் கூட அவர் கவனிக்கவில்லை. அவர் பூதவுடலுடன் இருக்கையில் எப்படிப் போதைப் பொருளுக்காகத் திணறி ஏங்கினாரோ அதே போல அவரது ஆத்ம உடலும் ஏங்கியது. அவர் நிலத்தில் தானே விழுந்தார். பின் தரையைத் தனது கை நகங்களால் கீறினார். பூவுடல்களைப் போலவே இந்த எண்ண வடிவங்களெல்லாம் அவருக்கு உண்மையாகவே பட்டன. அவர் சிணுங்கினார்; கெஞ்சினார்; அழுதார். தனக்குப் போதை மருந்து வேண்டும் இல்லையெனில் தனக்குப் பைத்தியம் பிடித்து விடுமெனத் திடமாக நம்பினார். பின்னர் தன்னில் இரக்கம் காட்டாததற்குக் கடவுளைக் கூக்குரலிட்டுத் திட்டத் தொடங்கினார். பூதவுடலுடன் இருக்கையில் எப்படி முழுப்போதையில் இருந்தாரோ அதே போலவே ஆத்ம நிலையிலும் இருந்தார். அதாவது தன்னைப் பற்றியோ ஏனையோரைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாத முழுப் போதைப் பொருளடிமை. போதைப் பொருளின் மூலமே தனது உடல் உபாதைகளைப் போக்கிக் கொண்டிருந்தார்.
"கடைசியாக அவர் உணர்வற்ற நித்திரையில் விழுந்தார். இந்நிலை மாதங்களுக்கும் நீடிக்கலாம் அல்லது கால காலத்துக்கும் நீடிக்கலாம். ஏனெனில் மனத்தை நாசம் செய்ததும் பூவுலகில் பௌதீக சக்திகளைப் பலவீனப் படுத்தியதும் சேர்ந்து அவரது ஆத்மாவின் மனதை வருத்தமுறச் செய்துவிட்டன. எனவே பல காலத்துக்கு அவர் ஆத்மீக வளர்ச்சி அடைவதற்கு இயலாதவராய் இருப்பார். சில சந்தர்ப்பங்களில் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பற்றி ஒன்றும் அறியாமல் அவர் பல நூறு வருடங்களுக்குத் தூக்கம் கொள்ளலாம். இறுதியாக அவர் விழித்தெழுகையில் பூவுலகில் அவருக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அவரைச் சுற்றியுள்ள புதிதாக வந்த ஆத்மாக்கள் அவரையோ அல்லது அவரைப் பற்றியோ ஒன்றும் அறியமாட்டார்கள். அவர் உண்மையாகவே ஒரு தொலைந்து விட்ட ஆத்மா. ஏனெனில் அவருக்கு ஒருவரையும் தெரியாது. அவரது நிலையைப் பற்றியும் ஒரு அறிகுறியும் இல்லை. முன்னர் அவரின் அன்புக்குப் பாத்திரமாய் இருந்தவர்களோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ நீண்ட காலங்களுக்கு முதலே உயரிய நிலைகளுக்கு முன்னேறியோ அல்லது புதிய பெயர்களுடனும் புதிய அடையாளங்களுடனும் மீண்டும் பூவுலகில் பிறந்தோ இருப்பார்கள். அவர் எல்லா விதமான உதவிகளையும் இழந்து நிற்பார். போதை நித்திரையில் இருந்து விழித்தெழுந்து பல காலமான பின்னரும் அவரது தூக்க மயக்கம் தொடரும். ஏனெனில் அவருக்குள் ஆர்வத் தீப்பொறியை உண்டாக்கக் கூடிய விதமாக ஒருவருமில்லை. அவரது உணர்ச்சியற்ற தன்மையானது அவருக்கு உதவ என்று முன்னே வருபவர்களையும் தடுக்கும். அவரிடமிருந்து ஏதாவது ஒளியோ சுடரோ ஒன்றுமே வெளிப்படாது. அவர் தனக்குள்ளேயே ஒடுங்கிப் போயிருப்பார்.
"இந்நிலையானது மீளவும் சில டஜனிலிருந்து பல நூறு வருடங்கள் வரையிலும் நீடிக்கலாம். அதாவது அவர் கடைசியில் இறைவனை நோக்கித் தன்னைக் காப்பாற்றுமாறு அழும் வரையும் நீடிக்கும். இவர் பல நூறு வருடங்களுக்கு முன்னரே தனது துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வர இறைவனை நோக்கி மிக மெதுவாகவேனும் முனகியிருந்தால் கூட அந்த ஆண்டவனுக்கு இவரது அழுகை கேட்டிருக்கும். நாமாகத்தான் முயற்சியைத் தொடங்க வேண்டும். எமது சொந்தத் தேவைகள் எம்மை இறைவனின் காலடிக்குக் கொண்டு வரும் வரை இறைவன் காத்திருப்பான். உடனடியாகப் பழைய ஆத்மாக்கள் அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் அவரை உயர்த்தி அவரைப் போன்ற நிலையில் இருப்பவர்களைச் சுகப்படுத்தும் மறுவாழ்வு இல்லத்துக்குக் கொண்டு செல்வர். அங்கே சிலர் போதைப் பொருளில் இருந்து விடுபடுகையில் ஏற்படும் உபாதைகளில் இருந்து தணிக்கப் பட்டிருப்பார்கள். ஏனெனில் உடனடியாக இறைவனை வழி நடத்தக் கோரியிருப்பார்கள். சிலர் இவரைப் போலவே பல காலங்களுக்கும் தூக்கத்திலிருந்து இப்போ போதைப் பொருளின் பிடியிலிருந்து விடுபடும் வேதனைகள் நீங்கப் பெற்றிருப்பார்கள். ஆனால் தம் வாழ்வை மீண்டும் வாழ்வதற்கு உதவி தேவையாக இருக்கும். அவர்களின் உள்ளே உள்ள ஆத்மீகப் பொறியை மீண்டும் தூண்டுதல் செய்து மீண்டும் ஒருமுறை நாமனைவரும் கடவுளே என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கடைசியாக அந்த மனிதர் சிகிச்சைக்குப் பிரதி பலன் தரத் தொடங்கி மீண்டும் கருணையும் வலிமையையும் வரப் பெற்று தான் மிக மிகப் போதையில் இருந்த காரணத்தால் தனது ஆத்மா துயில் கொண்டிருந்தது எனவும் அதனால் தான் கடவுளைத் தன்னால் நாட முடியவில்லை எனவும் விளங்கிக் கொண்டார். அவர் தனது மனநிலை வரம்புகளைப் பாதிப்புறச் செய்யக் கூடிய எந்தவொரு விஷயத்திலும் ஆசை வைப்பதில்லை என உறுதிமொழி எடுத்தார். அத்துடன் பிறப்பெடுக்க முன் உள்ளத்தாலும் உயிராலும் தன்னிலையிழந்து நோயுற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் தனது உறுதிமொழியை வலிமையாக்கிக் கொள்வார்."
ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நான் ஃபோர்டிடம் அவரது மோட்டார் விபத்துக்கும் அதன் காரணமான மோர்ஃபின் போதைப் பொருள் பழக்கத்துக்கும் பின்னர் குடிப்பழக்கத்துக்கும் எந்தக் கர்மவினைப் பயன் இட்டுச் சென்றதென அறிந்து கொண்டாரா எனக் கேட்டேன். அவர் நேரடியாகவே பின்வருமாறு பதிலளித்தார்: "மிக நன்றாகவே அறிந்துள்ளேன். முன்னைய ஒரு பதிவின்படி நான் ஒரு குடிகாரனாக இருந்திருக்கிறேன். அப்போது என்னையும் எனது பாட்டிலையும் விட வேறொருவரைப் பற்றியும் நான் நினைத்ததில்லை. அந்தப் பிறவியில் காலனித்துவ ஆட்சியின் போது பென்ஸிலவேனியா நகரத்தில் கிட்டத்தட்ட நான் ஒரு சாக்கடையில் தான் இறந்தேன். நான் நல்ல இருதயமுள்ளவனாக இருந்தாலும் எனது வீழ்ச்சிக்கு மதுபானமே காரணமாக இருந்தது. ஏனெனில் எனக்குக் குடும்பத்தில் இருந்த பிடிப்பிலும் பார்க்க மதுவில் இருந்த பிடிப்பு அதிகமாக இருந்ததால் நான் மதுவுக்கு அடிமையாகிக் குடும்பத்தையே தியாகம் செய்தேன். ஆர்தர் ஃபோர்டாக மீண்டும் இவ்வுலகுக்கு வந்த போது பிராயச்சித்தம் செய்து ஒரு ஆத்மீக வாழ்வு வாழ்வதென்ற உறுதியான தீர்மானத்துடன் தான் வந்தேன். எனது 'நத்திங் ஸோ ஸ்ரேன்ஜ்' (மிக விசித்திரமொன்றுமில்லை) என்ற புத்தகத்திலிருந்தும் எமது சம்பாஷணைகளில் இருந்தும் நீ அறிந்து கொண்டது போல அது தான் இளமையில் எனது வாழ்க்கை முறையாக இருந்தது. எனவே மேற்கு வேர்ஜீனியாவின் மலைப் பிரதேசத்திலோ அல்லது கென்ரக்கியிலோ ஒரு சலிக்க வைக்கும் போதகராக எனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பேன். ஆனால் கனவுகளின் மூலம் முந்தைய பிறவி ஒன்றிலே பண்டைய எகிப்து தேசத்திலே நான் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததனை உணரவைத்ததன் மூலம் எனது கண்கள் திறக்கும் படி செய்யப்பட்டது. சிறிது காலத்துக்கு இந்த இரு தீர்மானங்களுடனும் சந்தோஷமாக வாழ முடிந்தது. அதாவது உடல், மனச் சோர்வுகளால் எனது இன்னொரு வாழ்க்கையான ஊதாரித்தனமான குடிகாரனாக வாழ்ந்த வாழ்க்கைக்கான யன்னலை நான் திறக்கும் வரை அப்படி இருக்க முடிந்தது. அந்த விபத்தால் எனது அந்தக் கர்மவினைகளைக் கடப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு அளிக்கப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை அந்த விபத்தானது முன்கூட்டியே தீர்மானிக்கப் படவில்லை. ஆனால் யார் கண்டது? ஏனெனில் அவ்விபத்தில் இரு பெண்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் எனக்கு சபலத்தைத் தூண்டும் சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்பட்டது. எனவே முந்திய பிறவியில் நான் ஒரு ஊதாரியாக இருந்ததனால் எனது ஆத்மா உள்ளூர எனது பழைய நண்பனாகிய மது பானத்தைத் தழுவிக் கொண்டது. நான் சொல்வதை நம்பு அது நண்பனே இல்லை. பென்சில்வேனியாவில் கழிந்த அந்த வீணாகிப் போன வாழ்க்கையால் கடந்த பிறவியில் மது பானத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய தாங்கும் திறனும் கொள்ளக் கூடிய திறனும் என்னால் உருவாக்கப் பட்டிருந்ததால் அளவுக்கு மீறி அருந்தினால் தான் எனக்குப் போதை ஏறும். அப்படி இல்லாமல் இருந்திருந்தால் அவ்வப்போது சில சமயங்களில் மது அருந்துவது என்னைப் பெரிதும் பாதித்திருக்காது. ஆனால் பென்சில்வேனியாவின் வாழ்க்கையின் கர்மவினையானது எனது உயரிய தீர்மானத்தையும் மிஞ்சி விட்டது. அது எனது கடந்த வாழ்க்கையையும் முழுவதுமாகப் பாதிக்காதது அதிசயமே. என்னைப் புரிந்து கொண்ட நண்பர்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் எனது நலனில் அக்கறை காட்டினார்கள். நான் பாதை தவறும் போதெல்லாம் என்னைச் சரியான பாதையில் வழி நடத்துவார்கள். இப்போ அந்தப் பழைய அரக்கனுடன் தொடர்ந்து நடத்திய உறுதியான போராட்டத்தால் எனது பிரச்சனை தோற்கடிக்கப்பட்டு விட்டதென நான் நினைக்கிறேன். நான் வேண்டுமென்றே மது பானத்தைத் தேடவில்லை. அந்த முட்டாள் டாக்டர் இல்லை என்றால் ஆர்தர் ஃபோர்டாக வந்த எனது வாழ்வில் நான் அதனைச் சுவைத்திருந்திருக்க மாட்டேன்."
அந்தத் துக்ககரமான ஒப்புதல் வாக்குமூலத்தின் பின் சில நாட்களில் ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "உண்மையைத் தேடி (A Search for the Truth) என்ற புத்தகமானது தேடலுள்ளவர்கள், கவலையில் உள்ளவர்கள் போன்ற பலருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்ததாக இருந்தவாறு ஊக்கம் தரக்கூடிய விஷயங்களையும் உனது புத்தகத்தில் சேர்க்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். எனவே இன்று லிலிக்கு மிகத் திறமையாக இருக்கும் அந்த உயரிய சிந்தனை வாய்ந்த விஷயங்களைப் பற்றிச் சற்றே பேசுவோமாக. இதோ லிலி."
பின் லிலி பின்வரும் செய்தியுடன் டைப்ரைட்டரைப் பொறுப்பேற்றார்: "ரூத், பூதவுடலுடன் இருக்கையிலேயே ஒரு ஆத்மாவானது பூரணத்துவம் அடைவதற்குப் போதியளவு முயற்சிக்கவில்லை என்றால் உண்மையிலேயே அவர் பின்னடைவு அடைகிறார் என்று பொருள். ஏனெனில் இந்தப் பக்கத்திலே உள்ள விதிகளின் படி இங்கே பின்னடைவது என்பது சாத்தியமில்லை. ஒன்றில் முன்னேறுவது அல்லது முன்னேற்றம் ஏதுமின்றி அப்படியே நிற்பது மட்டுமே சாத்தியம். எனவே உடலுடன் இருக்கும் நிலை தான் எமது சலனங்களை வெல்வதன் மூலமும் மற்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதன் மூலமும் ஆத்மீக முன்னேற்றம் அடைவதற்கு என உருவாக்கப்பட்ட நிலையாகும். இவ்விஷயம் நன்றாக விளங்கிக் கொள்ளப்பட்டால் கெட்ட பழக்கங்களை வெல்வது, கூரிய நாக்கைக் கட்டுப்படுத்துவது, கோபத்தையும் சிறுமைத் தனத்தையும் அடக்குவது, எமது நலனுக்குச் சமமாகவாவது மற்றவர்களின் நலனையும் பேணுவது என்பவை மூலம் ஒரு அன்பற்ற செயலும் சொல்லும் ஒரு ஆத்மாவுக் கெதிராக மற்ற ஆத்மா புரியாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை உணர முடியும். ஆத்ம நிலையில் நாம் தாமாகவே மற்றையவர்களின் தேவைக்கேற்ப உதவுவோம். ஏனெனில் நாம் இறைவனின் விதிகளின் கீழே நேரடியாக உள்ளோம். அத்துடன் நீங்கள் குறுகிய கால இடைவெளிக்குள் அனுபவிப்பது போன்ற தனிப்பட்ட விருப்பங்கள் ஒன்றும் எமக்கு இங்கே பெரிதாக இருக்காது. அது தான் உங்களது மிக முக்கியமான பரீட்சையாகும். அதிலிருந்து எவ்வளவு தூரம் பலனடைகிறீர்கள்? உங்களது முன்னேற்றத்தைப் பாதிப்பவையும் அத்துடன் ஆத்மநிலைக்குப் போன பின்னரும் கூடப் பூவுலக ஆசைகளினால் ஆவியாகச் சுற்றும் நிலைக்குத் தள்ளக் கூடியவையுமான பழக்க வழக்கங்களைக் களைகிறீர்களா? மதுவருந்துதல், போதைப் பொருட்கள், சிகரெட் நஞ்சு (எந்த வடிவத்திலென்றாலும்) போன்றவையெல்லாம் அங்கு இருக்கையிலேயே களைந்தெறியப்பட வேண்டும். ஏனெனில் அடுத்த கட்டத்தில் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்காமல் இருப்பதற்காக. மற்றவர்களின் நலனில் தானாகவே அக்கறைப் படுவதற்குப் பழகுதல்; கோபக் கொந்தளிப்பை அன்பால் இடம் மாற்றுதல்; ஒருவரின் கடும் கோபத்துக்கு நாம் ஆளாவதை எவ்வளவு தூரம் நாம் விரும்பவில்லை என்பதைக் கண்டு கொண்டு, அதன் மூலம் இன்னொருவரை இனி எப்பொழுதுமே எமது கடும் கோபத்துக்கு ஆளாக்குவதில்லை என்பதைத் தீர்மானிப்பது; எம்மிலும் பார்க்கக் கணவனின் அல்லது மனைவியின் தேவைகளை முன் வைப்பது; எங்களில் பார்க்க ஒருவர் வித்தியாசமான அதிர்வுத் தளத்தில் இருப்பதால் அவரில் அன்பு செலுத்துவது கடினமாக இருந்தாலும் அவர்களின் மேல் அன்பு செலுத்துவது - இவையெல்லாம் பூவுலகில் மிக மிக மிக முக்கியமானவை ஆகும். ஏனெனில் இந்தப் பக்கத்தில் வேறு அலை வரிசையிலோ அதிர்வுத் தளத்திலோ இருப்பவர்கள் தாமாகவே விலகிக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரே விதமான ஈர்ப்புகள் உள்ளவர்கள் தான் ஒன்று சேர்க்கப் படுவோம்: எனவே சவால்கள் நிறைந்த அந்தப் பக்கத்திலே தான் முக்கியமான வளர்ச்சி உள்ளது."
அந்தத் துக்ககரமான ஒப்புதல் வாக்குமூலத்தின் பின் சில நாட்களில் ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "உண்மையைத் தேடி (A Search for the Truth) என்ற புத்தகமானது தேடலுள்ளவர்கள், கவலையில் உள்ளவர்கள் போன்ற பலருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்ததாக இருந்தவாறு ஊக்கம் தரக்கூடிய விஷயங்களையும் உனது புத்தகத்தில் சேர்க்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். எனவே இன்று லிலிக்கு மிகத் திறமையாக இருக்கும் அந்த உயரிய சிந்தனை வாய்ந்த விஷயங்களைப் பற்றிச் சற்றே பேசுவோமாக. இதோ லிலி."
பின் லிலி பின்வரும் செய்தியுடன் டைப்ரைட்டரைப் பொறுப்பேற்றார்: "ரூத், பூதவுடலுடன் இருக்கையிலேயே ஒரு ஆத்மாவானது பூரணத்துவம் அடைவதற்குப் போதியளவு முயற்சிக்கவில்லை என்றால் உண்மையிலேயே அவர் பின்னடைவு அடைகிறார் என்று பொருள். ஏனெனில் இந்தப் பக்கத்திலே உள்ள விதிகளின் படி இங்கே பின்னடைவது என்பது சாத்தியமில்லை. ஒன்றில் முன்னேறுவது அல்லது முன்னேற்றம் ஏதுமின்றி அப்படியே நிற்பது மட்டுமே சாத்தியம். எனவே உடலுடன் இருக்கும் நிலை தான் எமது சலனங்களை வெல்வதன் மூலமும் மற்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதன் மூலமும் ஆத்மீக முன்னேற்றம் அடைவதற்கு என உருவாக்கப்பட்ட நிலையாகும். இவ்விஷயம் நன்றாக விளங்கிக் கொள்ளப்பட்டால் கெட்ட பழக்கங்களை வெல்வது, கூரிய நாக்கைக் கட்டுப்படுத்துவது, கோபத்தையும் சிறுமைத் தனத்தையும் அடக்குவது, எமது நலனுக்குச் சமமாகவாவது மற்றவர்களின் நலனையும் பேணுவது என்பவை மூலம் ஒரு அன்பற்ற செயலும் சொல்லும் ஒரு ஆத்மாவுக் கெதிராக மற்ற ஆத்மா புரியாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை உணர முடியும். ஆத்ம நிலையில் நாம் தாமாகவே மற்றையவர்களின் தேவைக்கேற்ப உதவுவோம். ஏனெனில் நாம் இறைவனின் விதிகளின் கீழே நேரடியாக உள்ளோம். அத்துடன் நீங்கள் குறுகிய கால இடைவெளிக்குள் அனுபவிப்பது போன்ற தனிப்பட்ட விருப்பங்கள் ஒன்றும் எமக்கு இங்கே பெரிதாக இருக்காது. அது தான் உங்களது மிக முக்கியமான பரீட்சையாகும். அதிலிருந்து எவ்வளவு தூரம் பலனடைகிறீர்கள்? உங்களது முன்னேற்றத்தைப் பாதிப்பவையும் அத்துடன் ஆத்மநிலைக்குப் போன பின்னரும் கூடப் பூவுலக ஆசைகளினால் ஆவியாகச் சுற்றும் நிலைக்குத் தள்ளக் கூடியவையுமான பழக்க வழக்கங்களைக் களைகிறீர்களா? மதுவருந்துதல், போதைப் பொருட்கள், சிகரெட் நஞ்சு (எந்த வடிவத்திலென்றாலும்) போன்றவையெல்லாம் அங்கு இருக்கையிலேயே களைந்தெறியப்பட வேண்டும். ஏனெனில் அடுத்த கட்டத்தில் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்காமல் இருப்பதற்காக. மற்றவர்களின் நலனில் தானாகவே அக்கறைப் படுவதற்குப் பழகுதல்; கோபக் கொந்தளிப்பை அன்பால் இடம் மாற்றுதல்; ஒருவரின் கடும் கோபத்துக்கு நாம் ஆளாவதை எவ்வளவு தூரம் நாம் விரும்பவில்லை என்பதைக் கண்டு கொண்டு, அதன் மூலம் இன்னொருவரை இனி எப்பொழுதுமே எமது கடும் கோபத்துக்கு ஆளாக்குவதில்லை என்பதைத் தீர்மானிப்பது; எம்மிலும் பார்க்கக் கணவனின் அல்லது மனைவியின் தேவைகளை முன் வைப்பது; எங்களில் பார்க்க ஒருவர் வித்தியாசமான அதிர்வுத் தளத்தில் இருப்பதால் அவரில் அன்பு செலுத்துவது கடினமாக இருந்தாலும் அவர்களின் மேல் அன்பு செலுத்துவது - இவையெல்லாம் பூவுலகில் மிக மிக மிக முக்கியமானவை ஆகும். ஏனெனில் இந்தப் பக்கத்தில் வேறு அலை வரிசையிலோ அதிர்வுத் தளத்திலோ இருப்பவர்கள் தாமாகவே விலகிக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரே விதமான ஈர்ப்புகள் உள்ளவர்கள் தான் ஒன்று சேர்க்கப் படுவோம்: எனவே சவால்கள் நிறைந்த அந்தப் பக்கத்திலே தான் முக்கியமான வளர்ச்சி உள்ளது."
ஃபோர்ட் இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் எந்த வகையிலும் களைத்து விடவில்லை. நான் இண்டியானாபோலிஸுக்கு (Indianapolis) எனது குடும்பத்தைப் பார்க்கப் போயிருந்தேன். நான் டைப்ரைட்டருக்குத் திரும்பிய முதல் நாள் ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "உனது பிரயாணம் மகிழ்ச்சிகரமாக இருந்ததை அறிந்து சந்தோசம். இறப்பிற்கு அப்பால் வரும் இப்படிப்பட்ட நிலையை அடைந்த பின்னரும் கூடத் தாம் மனிதராக, மனிதவுடல் சம்பந்தப்பட்ட ஆசைகளுடன் இருந்ததை மறக்க மாட்டாமல், கடந்து சென்ற பூவுலக வாழ்க்கையில் ஏற்பட்ட பழக்க வழக்கங்களைக் கைவிட முடியாத காரணத்தால் இந்தச் சூழ்நிலைக் கேற்ப மாற முடியாமல் இருப்பவர்களைப் பற்றி மீண்டும் பார்ப்போம். அவர்கள் புகை பிடிப்பவர்களையோ மது அருந்துபவர்களையோ அல்லது போதைப் பொருள் உபயோகிப்பவர்களையோ சுற்றித் திரிந்து அவர்களின் கிளர்ச்சிகளையோ உணர்ச்சிகளையோ முதலில் அனுபவித்தது போல அனுபவிப்பார்கள். அத்துடன் மது, போதைப் பொருள், புகைத்தல் மற்றும் மரிஜுவானா போன்ற போதைப் பொருட்களை உபயோகித்து இன்பம் அனுபவிப்பவர்களின் ஒரு பகுதியாகத் தாமும் இருக்க ஆவல் படுவார்கள். அவர்கள் இங்கிருப்பவர்களில் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாகும். ஏனெனில் அவர்கள் அந்தப் பழக்கங்களுடன் கூடுதலாக ஒன்றி விடுவதால் அவற்றைக் கைவிடாமல் எதற்கு ஆசைப்படுகிறார்களோ அவற்றைத் தகாத வழிகளில் அனுபவித்து மகிழ்வார்கள். அந்த சந்தோஷங்களைத் தீவிரமாக விரும்புவதால் ஆத்மீக வழிகளில் முன்னேறுவதற்கு விரைவில் முன் வரமாட்டார்கள். அது அவர்களின் ஆத்மாவின் முன்னேற்றத்துக்கு மோசமான பின்னடைவாகும்.
"வேறு ஒரு காரணத்துக்காக இல்லாவிடினும் இந்த ஒரு காரணத்துக்காகப் புகை பிடித்தல், மதுவருந்துதல், போதைப்பொருள் போன்ற பழக்கங்களைப் பூவுலகில் இருக்கையிலேயே கைவிடுவது நல்லது. ஆத்ம உலகுக்கு வரும் வரை காத்திருப்பதிலும் பார்க்க அங்கே அது மிக இலகுவாக இருக்கும். ஆத்ம உலகில் பழக்கங்களை உடைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே வழக்கமாக அவை அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்போது அவை வேறு வடிவமெடுக்கலாம். அத்துடன் சிலசமயம் அபாயகரமான போதைப் பழக்கமாக மாறலாம்."
அவரது போதைப் பழக்கத்தைப் பற்றி நேரடியாக மீண்டும் ஒரு முறை கேட்கும் துணிவு எனக்கு வரவில்லை. ஆனால் ஒரு நாள் ஃபோர்ட் திடீரெனப் பின்வருமாறு தொடங்கினார்: "உன்னை ஒரே தொந்தரவு செய்து கொண்டிருக்கும் அந்தக் கேள்வியைப் பற்றிப் பார்ப்போம் - அதாவது நான் இங்கும் தொடர்ந்து மது போதைக்கோ சிகரெட், போதைப் பொருள் போன்ற விஷயங்களுக்கோ ஏங்குகிறேனா என்பது தானே? அதற்கான பதில் என்ன என்றால், தற்போது முடிந்து போன எனது பூவுலக வாழ்க்கையில் நான் அவற்றைத் தொடாமல் இருந்திருந்தால் இங்கே எனது நிலை மேலும் சிறப்பாக இருந்திருக்கும். கூடுதலான புரிந்துணர்வுடன் இருந்திருப்பேன். அத்துடன் விரைவாக ஆத்மீக முன்னேற்றம் அடைந்திருப்பேன். ஆம் நான் சில வேளைகளில் குடி போதையில் இருக்கும் யாராவது ஒருவரைச் சுற்றித் திரிகிறேன். இது ஒரு வெட்கப்படத் தக்க மோசமான செயலாகும். ஆனால் இது ஏனையோருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். அதாவது அவர்களுக்கு அங்கு இருக்கையிலேயே அந்தக் கெட்ட பழக்கங்களை ஒழிக்கும் படி சொல்லும் ஒரு எச்சரிக்கை ஆகும்.
"ரூத், உனது கனமான புகை பிடிக்கும் பழக்கத்தை அங்கேயே முதலில் நிறுத்தா விட்டால் இங்கு வந்த பின் களைய முடியாது. மதுப் பழக்கத்தை முற்றாக நான் விடவில்லை என்பது உனக்குத் தெரியும். நான் குடி போதையில் அடிக்கடி வாகனத்தில் இருந்து விழுந்து கொண்டிருந்தேன். மதுப் பழக்கத்தை முற்று முழுதாக அங்கேயே விட்டு விட்டு வேறு விஷயங்களில் நான் எனது கவனத்தைத் திருப்பி இருந்தால் பிழையான பூவுலகத் தளையில் நான் கட்டுண்ணாமல் இங்கேயுள்ள முன்னேற்றத்துக்குச் சரியான முறையில் ஈடுகொடுக்க இயலுமாக இருந்திருக்கும். எனவே நான் சொல்வதைக் கவனி. நான் தேவையின்றி அறிவுரைகள் வழங்க மாட்டேன் என உனக்குத் தெரியும். நீ தான் கேட்டாய். இது தான் எனது பதில். தொல்லை தரக்கூடிய கெட்ட பழக்கங்களை இயலுமாக இருக்கையிலேயே கைவிடுங்கள்.
"வேறு ஒரு காரணத்துக்காக இல்லாவிடினும் இந்த ஒரு காரணத்துக்காகப் புகை பிடித்தல், மதுவருந்துதல், போதைப்பொருள் போன்ற பழக்கங்களைப் பூவுலகில் இருக்கையிலேயே கைவிடுவது நல்லது. ஆத்ம உலகுக்கு வரும் வரை காத்திருப்பதிலும் பார்க்க அங்கே அது மிக இலகுவாக இருக்கும். ஆத்ம உலகில் பழக்கங்களை உடைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே வழக்கமாக அவை அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்போது அவை வேறு வடிவமெடுக்கலாம். அத்துடன் சிலசமயம் அபாயகரமான போதைப் பழக்கமாக மாறலாம்."
அவரது போதைப் பழக்கத்தைப் பற்றி நேரடியாக மீண்டும் ஒரு முறை கேட்கும் துணிவு எனக்கு வரவில்லை. ஆனால் ஒரு நாள் ஃபோர்ட் திடீரெனப் பின்வருமாறு தொடங்கினார்: "உன்னை ஒரே தொந்தரவு செய்து கொண்டிருக்கும் அந்தக் கேள்வியைப் பற்றிப் பார்ப்போம் - அதாவது நான் இங்கும் தொடர்ந்து மது போதைக்கோ சிகரெட், போதைப் பொருள் போன்ற விஷயங்களுக்கோ ஏங்குகிறேனா என்பது தானே? அதற்கான பதில் என்ன என்றால், தற்போது முடிந்து போன எனது பூவுலக வாழ்க்கையில் நான் அவற்றைத் தொடாமல் இருந்திருந்தால் இங்கே எனது நிலை மேலும் சிறப்பாக இருந்திருக்கும். கூடுதலான புரிந்துணர்வுடன் இருந்திருப்பேன். அத்துடன் விரைவாக ஆத்மீக முன்னேற்றம் அடைந்திருப்பேன். ஆம் நான் சில வேளைகளில் குடி போதையில் இருக்கும் யாராவது ஒருவரைச் சுற்றித் திரிகிறேன். இது ஒரு வெட்கப்படத் தக்க மோசமான செயலாகும். ஆனால் இது ஏனையோருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். அதாவது அவர்களுக்கு அங்கு இருக்கையிலேயே அந்தக் கெட்ட பழக்கங்களை ஒழிக்கும் படி சொல்லும் ஒரு எச்சரிக்கை ஆகும்.
"ரூத், உனது கனமான புகை பிடிக்கும் பழக்கத்தை அங்கேயே முதலில் நிறுத்தா விட்டால் இங்கு வந்த பின் களைய முடியாது. மதுப் பழக்கத்தை முற்றாக நான் விடவில்லை என்பது உனக்குத் தெரியும். நான் குடி போதையில் அடிக்கடி வாகனத்தில் இருந்து விழுந்து கொண்டிருந்தேன். மதுப் பழக்கத்தை முற்று முழுதாக அங்கேயே விட்டு விட்டு வேறு விஷயங்களில் நான் எனது கவனத்தைத் திருப்பி இருந்தால் பிழையான பூவுலகத் தளையில் நான் கட்டுண்ணாமல் இங்கேயுள்ள முன்னேற்றத்துக்குச் சரியான முறையில் ஈடுகொடுக்க இயலுமாக இருந்திருக்கும். எனவே நான் சொல்வதைக் கவனி. நான் தேவையின்றி அறிவுரைகள் வழங்க மாட்டேன் என உனக்குத் தெரியும். நீ தான் கேட்டாய். இது தான் எனது பதில். தொல்லை தரக்கூடிய கெட்ட பழக்கங்களை இயலுமாக இருக்கையிலேயே கைவிடுங்கள்.